தில்லியில் புதிதாக 31 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71,634 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 31 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதம்.
மேலும் 32 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,716 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,12,244 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,080 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 392 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.