இந்தியா

கோவாவிற்கு 2-ம் கட்டமாக 18 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள்

DIN


கோவாவிற்கு இரண்டாம் கட்டமாக 18 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

வரும் வெள்ளிக்கிழமை (ஜன.22) முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று கோவா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 16-ஆம் தேதி முதல் முதற்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், கோவாவில் 2 தனியார் மையங்கள் உள்பட 7 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 18 ஆயிரம் கரோனா தடுப்பு மருந்துகள் மும்பையிலிருந்து விமானம் மூலம் கோவாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 23,500 கரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டது. அதில் 426 தடுப்பு மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

அடுத்த வாரம் முதல் வாரத்தில் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கோவா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் ஊழியா் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT