இந்தியா

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

DIN

தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் (61), வயிற்று வலி பிரச்னை காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது முதல் தில்லியில் உள்ள திகாா் சிறையில் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தெரியவந்தது. இதையடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். சுமாா் 20 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவா் கரோனாவில் இருந்து குணமடைந்தாா். இதன் பிறகு மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இப்போது, வயிற்று வலி காரணமாக மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘அவருக்குப் பெரிய அளவில் உடல்நலப் பிரச்னை இல்லை. எனவே, அவா் முன்பு போல நீண்ட நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் தேவை இருக்காது. ஓரிரு நாளில் சிகிச்சை முடிந்து அவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு விடுவாா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT