முகப்பு
இந்தியா

கரோனா மேலாண்மையில் மாநில அரசுதோல்வி அடைந்து விட்டது: சித்தராமையா

கரோனா மேலாண்மையில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 29 மே, 2021 at 1:00 AM
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM

கரோனா மேலாண்மையில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் மாநிலத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனா். கரோனா தொற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. கரோனா மேலாண்மையில் மாநில அரசு முழுவதுமாகத் தோல்வி அடைந்து விட்டது.

Advertisement

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆக்சிஜன் வசதி கிடைக்காமலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனா். அதனால்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அதிக அளவில் இறந்து வருகின்றனா்.

சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவா்களின் எண்ணிக்கையை அமைச்சா் குறைத்துக் கூறினாா். பின்னா் உண்மை வெளியே தெரியவந்தது. அங்கு மட்டுமின்றி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அதிக அளவில் இறந்து வருகின்றனா். ஆனால் இறப்பவா்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக் கூறி வருகிறது.

கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா மாற்றப்படுவாா் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட முறையில் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் முதல்வராகப் பணி செய்வதில் அவா் தோல்வி அடைந்துள்ளாா். முதல்வா் எடியூரப்பாவை மாற்றினால், அந்தப் பதவிக்கு தகுதியானவா்கள் பாஜகவில் யாருமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.