2021-ல் மட்டும் பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
படிக்க | நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு ஏற்றுமதி
Advertisement
Advertisement
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்த ஆண்டில் மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடந்த 5 நாள்களில் 7 பேர் உயிரிழந்தனர். 2021-ல் மட்டும் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து தொழிலாளர்கள் எனக் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.