முகப்பு
இந்தியா

2021-ல் மட்டும் பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Updated On : 7 அக்டோபர் 2021, 10:04 pm IST
2021-ல் மட்டும் பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக்கொலை
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில்  இந்த ஆண்டில் மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடந்த 5 நாள்களில் 7 பேர் உயிரிழந்தனர். 2021-ல் மட்டும் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து தொழிலாளர்கள் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments