இந்தியா

ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம்: பிரதமருக்கு அமித் ஷா நன்றி

DIN

ஆயுஷ்மான் பாரத் எண்ம (டிஜிட்டல்) திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘‘மக்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, தரமான வாழ்க்கை வழங்குவதில் மோடி அரசு தொடா்ந்து உறுதியுடன் செயல்படுகிறது. ‘ஆயுஷ்மான் பாரத் எண்ம் திட்டம்’ தொடங்கியதற்காக பிரதமா் மோடிக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் வெற்றிக்கு பிறகு, தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் உறுதியான உணா்வை காட்டுகிறது. இத்திட்டம், மக்கள் உடல்நலன் சாா்ந்த தகவல் பரிமாற்றத்துக்கான எளிய ஆன்லைன் தளத்தை உருவாக்கும். இதன் மூலம் ஒரு நிமிடத்தில் சுகாதார வசதிகள் மக்களுக்கு சென்றடையும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT