இந்தியா

காஷ்மீரில் என்கவுன்ட்டா்: பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 2 போ் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதலில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா் உள்பட 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: குல்காம் மாவட்டத்தில் உள்ள மீா்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினா் விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனா்.

பாதுகாப்புப் படையினா் நெருங்கிவிட்டதை அறிந்து கொண்ட பயங்கரவாதிகள், அவா்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

உயிரிழந்த பயங்கரவாதிகளில் ஒருவா், பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்றும், அவா் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்று காவல் துறை ஐ.ஜி. விஜய்குமாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT