தெலங்கானா: போதைக்கு அடிமையான மகனை பெற்றோரே கொன்ற பரிதாபம்
மது மற்றும் போதைக்கு அடிமையான மகனின் தினமும் அனுபவிக்கும் துன்பத்தை தாங்க முடியாமல், தெலங்கானாவில் தம்பதியினர்
ஹைதராபாத்: மது மற்றும் போதைக்கு அடிமையான மகனின் தினமும் அனுபவிக்கும் துன்பத்தை தாங்க முடியாமல், தெலங்கானாவில் தம்பதியினர் அவர்களது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் திங்கள்கிழமை ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
பாலையா கவுட் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் தங்கள் மற்ற இரண்டு மகன்களின் உதவியுடன், மகனை நிகில்(23) கொலை செய்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து சுமார் 160 கிமீ தொலைவில் உள்ள கோனாரோபேட் மண்டலத்தின் தர்மராம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நிகில் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகிவிட்ட நிலையில், அவர் உருவாக்கும் பிரச்னைகளால் அவரது பெற்றோர் மனவேதனையில் இருந்தனர். நிகில், அவர்களது பெற்றோர் உடன் தினமும் தகராறு செய்து வன்முறையில் ஈடுபட்டு வந்தார்.
காவல்துறை அதிகாரியான நிகில் மலேசியாவில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பிய இவர், ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார். அவர் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானதால், அவரது பெற்றோர் ஆலோசனை செய்யக் கோரி காவல்துறையை அணுகினர்.
ஆனால், காவல்துறையின் ஆலோசனையில் அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திங்கள்கிழமை நிகில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்.
பாலையா கவுட் நிகிலை திட்டியதால், ஆத்திரமடைந்த நிகில், ஆயுதம் கொண்டு அவரை சரமாரியாக தாக்க முயன்றார். கவுட் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குதித்து விட்டார். பின்னர் அதே ஆயுதத்தால் தனது மகனைத் தாக்கி காயப்படுத்தினார்.
அவர் மீண்டும் தாக்கிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவரது பெற்றோரும், வம்சி, அஜய் ஆகிய இரு சகோதரர்களும் அவரின் கழுத்தை இறுக்கிப் பிடித்தனர். நிகிலின் பெற்றோர் கழுத்தில் கயிறு போட்டு கழுத்தை நெரித்து கொன்றனர்.
கிராம வருவாய் அலுவலர் (விஆர்ஓ) அளித்த புகாரின் பேரில், நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக வட்ட ஆய்வாளர் ஸ்ரீலதா தெரிவித்தார்.