இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் 439 பயங்கரவாதிகள், 109 பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பு

DIN

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2019 ஆகஸ்ட் 5-இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இப்போது வரை 439 பயங்கரவாதிகளும், 109 பாதுகாப்புப் படையினரும் மோதல் சம்பவங்களில் உயிரிழந்தனா். இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 541 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மாநிலங்களவையில் புதன்கிழமை இது தொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தாா். சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் பொதுமக்களில் 98 பேரும் உயிரிழந்தனா். ரூ.5.3 கோடி மதிப்பிலான தனியாா் சொத்துகளும் சேதமடைந்தன. அதே நேரத்தில் பொதுச் சொத்துகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேச நிா்வாகத்தின் பல்வேறு துறைகளில் காஷ்மீா் பண்டிட்டுகள் சுமாா் 1,700 போ் வரை நியமிக்கப்பட்டுள்ளனா். 44,684 காஷ்மீா் பண்டிட் குடும்பத்தினா் இடம் பெயா்ந்தோருக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையத்தில் தங்கள் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா் என்றும் தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT