இந்தியா

87 குற்றவாளிகளின் பட்டியலை பிகாரிடம் அளித்த உ.பி. காவல்துறை

பிகாரில் தேடப்பட்டு வந்த 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உத்தரப் பிரதேச காவல்துறை ஒப்படைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

DIN

பிகாரில் தேடப்பட்டு வந்த 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உத்தரப் பிரதேச காவல்துறை ஒப்படைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் எஸ்.பி மற்றும்  ஏ.எஸ்.பி.,களுக்கு பிகார் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய் சிங் உத்தரவிட்டார். 

இதையடுத்து, தீவிர நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் விளைவாக 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உ.பி.காவல்துறை பிகாரிடம் ஒப்படைத்துள்ளது. 

அதிகபட்ச குற்றவாளிகள் பிகாரின் பாகல்பூர் மற்றும் கோசி மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள். தவிர, சில குற்றவாளிகள் சிவான், கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரன், பக்சர், ரோஹ்தாஸ், கைமூர், போஜ்பூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற கொடூரமான குற்றங்களின் கீழ் உத்தரப் பிரதேச மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT