இந்தியா

5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம்

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

DIN

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மாநிலங்களவைத் தலைவரின் அறையில் இவர்களுக்கு வெள்ளிக்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், ஆந்திரத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி சிர்கபூர் மற்றும் ரியாகா கிருஷ்ணய்யா (இருவரும் ஒய்எஸ்ஆர்சிபி), தெலங்கானாவில் இருந்து தாமோதர் ராவ் திவகொண்டா மற்றும் பி.பார்த்தசாரதி ரெட்டி (டிஆர்எஸ்) மற்றும் ஒடிசாவிலிருந்து நிரஞ்சன் பிஷி (பிஜேடி) ஆகியோர் பதவியேற்றனர்.

முன்னதாக அந்தந்த மாநிலங்களிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT