இந்தியா

5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம்

DIN

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மாநிலங்களவைத் தலைவரின் அறையில் இவர்களுக்கு வெள்ளிக்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், ஆந்திரத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி சிர்கபூர் மற்றும் ரியாகா கிருஷ்ணய்யா (இருவரும் ஒய்எஸ்ஆர்சிபி), தெலங்கானாவில் இருந்து தாமோதர் ராவ் திவகொண்டா மற்றும் பி.பார்த்தசாரதி ரெட்டி (டிஆர்எஸ்) மற்றும் ஒடிசாவிலிருந்து நிரஞ்சன் பிஷி (பிஜேடி) ஆகியோர் பதவியேற்றனர்.

முன்னதாக அந்தந்த மாநிலங்களிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT