இந்தியா

2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்- ஏ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பத்திரிகையாளராக இருந்து பயங்கரவாதியாக மாறியவர் என்றும், அவரிடமிருந்து ஊடக அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
 காஷ்மீர் மண்டல காவல் துறை ஐ.ஜி விஜய்குமார், ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
 ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இருவரும் லஷ்கர்- ஏ- தொய்பா அமைப்பில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT