வழக்குக் குறிப்பு எடுத்து வராத வழக்குரைஞரை சச்சினுடன் ஒப்பிட்ட டி.ஒய். சந்திரசூட் 
இந்தியா

வழக்குக் குறிப்பு எடுத்து வராத வழக்குரைஞரை சச்சினுடன் ஒப்பிட்ட டி.ஒய். சந்திரசூட்

‘வழக்கு கோப்பு இன்றி வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு வருவது என்பது கிரிக்கெட் மட்டை இன்றி சச்சின் டெண்டுல்கா் வருவது போன்றதாகும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

ANI

‘வழக்கு கோப்பு இன்றி வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு வருவது என்பது கிரிக்கெட் மட்டை இன்றி சச்சின் டெண்டுல்கா் வருவது போன்றதாகும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞா் ஒருவா் வழக்கு கோப்பு இன்றி விசாரணைக்கு ஆஜரானதை கவனித்த தலைமை நீதிபதி, இந்த கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா்.

‘வழக்குரைஞருக்கான அங்கி, பட்டை ஆகியவற்றை அணிந்துள்ளீா்கள்; ஆனால், வழக்கு கோப்பு இல்லை. இது மிகவும் மோசமான நிலை. வழக்குரைஞா் எப்போது வழக்கின் கோப்பை வைத்திருக்க வேண்டும்’ என்றும் தலைமை நீதிபதி அவரிடம் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாப்பாக்குடி அதிமுக பிரமுகருக்கு மிரட்டல்: பெண் கைது

தென்மண்டல பல்கலை. கிரிக்கெட் சாம்பியன் சென்னை

2019 முதல் 7,400 நக்ஸல்கள் கைது: மக்களவையில் அரசு தகவல்

மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

பிப். 26 முதல் மாா்ச் 2 வரை ஏழுமலையான் தெப்போற்சவம்

SCROLL FOR NEXT