கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!
இந்திய கடவுச்சீட்டுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறித்து...
இந்திய கடவுச்சீட்டுக்கான (பாஸ்போர்ட்) கட்டணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் உயர்த்தியுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 36 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்கான விண்ணப்பக்கக் கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், அவசரத் தேவைக்கான `தட்கல்' கடவுச்சீட்டின் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
60 பக்கங்கள் கொண்ட புதிய அல்லது மறுவழங்கல் `தட்கல்' கடவுச்சீட்டின் முன்பிருந்த கட்டணத் தொகையான ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் தட்கல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து கட்டண உயர்வும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Ministry of External Affairs has increased the fee for Indian passports.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.