முகப்பு
இந்தியா

பணியிடங்களில் பெண்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.. பினராயி விஜயன் 

தீர்வு காணப்படவேண்டும் என்றால் மனமாற்றம் மிகவும் முக்கியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட் 2022, 6:13 pm IST
பினராயி விஜயன் 
பகிர்:

திருவனந்தபுரம்: பணியிடங்களில் தற்போதும் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்றால் மனமாற்றம் மிகவும் முக்கியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் பேசிய பினராயி விஜயன், பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு மாநில அரசும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன.

மாநிலத்தின் உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு உறுதி செய்திருப்பதன் மூலம், கேரளம் ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் கூட, பணியிடங்களில் பெண்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்றால், அதற்கு, இந்த சமுதாயத்தில் இன்னமும் ஆணாதிக்க சிந்தனை உள்ளது. எனவே, மனமாற்றம் ஒன்றுதான், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வை தரும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments