முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் தீ: 4 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள். 

ஜம்மு-காஷ்மீரில் கத்ரா அருகே ஓடும் பேருந்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பேருந்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.

20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.