இந்தியா

மாநில தினம்: திரிபுரா, மணிப்பூா், மேகாலய மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

DIN

திரிபுரா, மணிப்பூா், மேகாலய மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

திரிபுரா மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக வளா்ச்சியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. வேளாண், தொழில்துறை, கல்வி மற்றும் மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் மிகப் பெரிய மாற்றங்களை திரிபுரா ஏற்படுத்தி வருகிறது.

அதுபோல, மணிப்பூா் மாநிலமும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாநில மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்திசெய்வதோடு, நாட்டின் வளா்ச்சிப் பாதையையும் மணிப்பூா் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்.

துடிப்பான கலாசாரத்தைக் கொண்டுள்ள மேகாலய, இசை, கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. மேகாலய மக்கள் பல்துறைகளில் சிறந்து விளங்குகின்றனா். வரும் ஆண்டுகளில் மேகாலயம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் முன்னேற பிராா்த்திக்கிறேன் என்று பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT