உலக தரத்துடன் கட்டப்படவிருக்கும் ஜம்மு புதிய விமான நிலையம்
ஜம்முவில் உள்ள தற்போதைய விமான நிலையத்தை ரூ.523 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப் புள்ளி மத்திய அரசால் கோரப்பட்டிருக்கிறது.
ஜம்முவில் உள்ள தற்போதைய விமான நிலையத்தை ரூ.523 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப் புள்ளி மத்திய அரசால் கோரப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளை கையாளும் வகையில், தற்போதிருக்கும் நிலப்பரப்பை விட நான்கு மடங்கு பெரியதாக, புதிய விமான நிலையம் அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் விமான நிலையம் வரவும், விமான நிலையத்திலிருந்து வெளியேறவும் தனித்தனி வழிகள், பல தொழில்நுட்ப வசதிகளுடன் அமையவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து வெறும் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாக, ஜம்மு விமான நிலையம், மிகுந்த பதற்றமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
தற்போது, 24 விமானம் தரையிறங்கும் தளங்கள், 24 புறப்படும் தளங்களுடன் ஆண்டுக்கு 12 லட்சம் பேரை கையாளும் வகையில் உள்ளது. இது 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.