கரோனா தொற்றால், புதிதாக 656 பேர் பாதிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
புது தில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 656 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒட்டுமொத்தமாக 3,742 பேருக்குக் கரோனா செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலை 8 மணி தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் இறந்த கரோனா நோயாளி ஒருவர் உள்பட இதுவரை நாடு முழுவதும் 5,33,333 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 4.50 கோடியாக அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமாகும் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விபரீதமாக மாறிய சச்சரவு: இளைஞர் பலி!
மத்திய அரசின் இணையத்தளத்தின் தகவல்படி 220.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.