17,362 கார்களை திரும்பப் பெற்றது மாருதி சுஸுகி: காரணம்?
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 7 மாடல் கார்களில் 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 7 மாடல் கார்களில் 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா உள்ளிட்ட ஏழு மாடல் கார்களின் காற்றுப் பைகளில் பழுது இருப்பதாகக் கூறி 17 ஆயிரம் கார்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்க ஆசையா? ஜஸ்ட் ரூ.3.86 கோடி போதும்
Advertisement
Advertisement
இந்த வாகனங்கள் அனைத்தும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.
இந்த கார்கள் திரும்பப் பெறப்பட்டு, அவற்றின் காற்றுப்பைகள் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்பட்டால் கட்டணமில்லாமல் மாற்றித் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.