தில்லியில் கல்லூரி கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் எறும்புகள்
தில்லியில் கல்லூரி ஒன்றின் கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் இறந்த நிலையில் எறும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியின் கேண்டீனில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் ஒருவர் சமோசா வாங்கியுள்ளார். ஆனால் ஆசையாக திண்பதற்காக வாங்கிய சமோசாவை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் இறந்த நிலையில் எறும்புகள் கிடந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் எனது நண்பரும் தயாள் சிங் கல்லூரியில் உள்ள கேண்டீனில் இருந்து இவற்றை வாங்கினோம். ஆனால் அந்த உணவில் எறும்புகள் இருப்பதைக் கண்டோம். இதை அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.
கேண்டீனில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் இவ்வாறு பதிவிட்டுள்ளார். பின்னர் அதனை விடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாவிலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.