முகப்பு
இந்தியா

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்?

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்களால் பரபரப்பு

Updated On : 8 ஜூன் 2026, 10:07 am IST
ராகுல் காந்தி - ani
பகிர்:

தலைநகர் புது தில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த பேனர்களை யார் வைத்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி மற்றும் இண்டி கூட்டணி பற்றி, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயநிதி, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் தலைவருமான மமதா பேனர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசிய வாசகங்கள் அடங்கிய பேனர்கள் தலைவர்களின் புகைப்படங்களுடன் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக பேசி வரும் நிலையில், அவர்கள் தரப்பில் பேனர் வைக்கப்பட்டிருக்கலாமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆனால், கூட்டணியில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்பவர்கள் எவ்வாறு ஒற்றிணைந்து போராடுவார்கள் என்ற வாசகம் அடங்கிய பேனரால், இந்த பேனர்களை வைத்தது யாராக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Advertisement

Advertisement

summary

Who put up banners against Rahul and Congress party in Delhi?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.