குவைத் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி புதிய குவைத்துக்குத் தேவையான மனிதவளமும், திறனும் இந்தியாவிடம் உள்ளன என்று உறுதியளித்துள்ளார்.
குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை ஏற்று பிரதமா் மோடி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் அந்நாட்டு முக்கியத் தலைவா்களுடன் பிரதமா் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரை இன்று பிரதமர் மோடி சந்தித்தார்.
கடந்த 43 ஆண்டுகளில் வளைகுடா நாட்டிற்குச் செல்லும் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
அடுத்த சில வாரங்களுக்குக் கொண்டாடப்பட இருக்கும் பண்டிகைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, “இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், இந்தியப் பிரதமர் குவைத் வருவதற்கு 43 ஆண்டுகள் ஆகியுள்ளது.
நீங்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளீர்கள். ஆனால் உங்களைப் பார்த்தால், இங்கே ஒரு சிறிய இந்தியா தோன்றிவிட்டது போல உணர்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத் வருகிறார்கள். நீங்கள் குவைத் சமூகத்திற்கு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியத் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைக் கலந்து, குவைத்தின் படிக்கட்டுகளில் இந்திய திறன்களின் வண்ணங்களை நிரப்பியிருக்கிறீர்கள்” என அவர் பேசினார்.
மேலும், புதிய குவைத்துக்கு தேவைப்படும் மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.