dot com
இந்தியா

111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு

Din

கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கண்டறிந்துள்ளது.

மருந்துகள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தர அளவீடுகளில் அந்த மருந்து மாதிரியின் தோல்வியடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டுமே தரமற்றவை என்றும் பொது விற்பனையில் கிடைக்கும் மற்ற மருந்துகள் பற்றி மக்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், அவா்கள் கூறுகையில், ‘கடந்த நவம்பரில், இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பிகாா் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காஸியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது.

இவ்வகை மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளா்களால் மற்ற நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயா்களைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்படுகின்றன.

தரமற்ற மற்றும் போலி மருந்துகளை கண்டறிவதற்கான நடவடிக்கையை மாநில கட்டுப்பாட்டாளா்களுடன் இணைந்து சிடிஎஸ்சிஓ தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மருந்துகள் அடையாளம் காணப்பட்டு, பொது விற்பனையில் இருந்து அகற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது’ என்றனா்.

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை! 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் விசாரணை!

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

வித் லவ் வசூல் இவ்வளவா..?

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், பார்மா பங்குகள் உயர்வு!!

SCROLL FOR NEXT