முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - அகிலேஷ் யாதவ் திடீர் சந்திப்பு!

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 21 ஜூலை 2024, 1:47 pm IST
மம்தா-அகிலேஷ்.
பகிர்:

மேற்கு வங்க மாநிலம், எஸ்பிளனேட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ‘தியாகிகள் தின’ பேரணி இன்று பிற்பகல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கொல்கத்தா வந்துள்ளார்.

இந்த வருகையின் ஒருபகுதியாக காளிகட்டில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் அவரை அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

இரு தலைவர்களும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மம்தாவும் அகிலேஷும் ‘தியாகிகள் தின’ பேரணிக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

1993, ஜூலை 21-ஆம் தேதி, அப்போது இளைஞா் காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பானா்ஜி தலைமையில் நடந்த மிகப் பெரிய பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 13 காங்கிரஸ் தொண்டா்கள் பலியாகினர் .

ஆண்டுதோறும் ஜூலை 21-ஆம் தேதியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ‘தியாகிகள் தினம்’ ஆக அனுசரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments