(கோப்புப்படம்). 
இந்தியா

ஹரியாணா: கால்நடை தாக்கியதில் பெண் பலி

ஹரியாணாவில் தெரு மாடு தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை பலியானார்.

DIN

ஹரியாணாவில் தெரு மாடு தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை பலியானார்.

ஹரியாணா மாநிலம், படேல் நகரில் குர்ப்ரீத் கவுர்(65) தனது வீட்டின் நுழைவாயில் பகுதியை இன்று தூய்மைபடுத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று அவரை திடீரென தாக்கியது.

அதில் கவுர் விழுந்த பிறகும் அந்த மாடு அவரைத் தாக்கிக் கொண்டே இருந்தது. இருப்பினும் அருகிலிருந்த சிலர் அந்த மாட்டை விரட்ட முயன்றுள்ளனர்.

பின்னர் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT