கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (70). இவா் அருகேயுள்ள விவசாயத் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியிலிருந்த காட்டு மாடு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பொன்னம்மாள் உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினா் மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement