FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:05 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (70). இவா் அருகேயுள்ள விவசாயத் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியிலிருந்த காட்டு மாடு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பொன்னம்மாள் உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினா் மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments