முகப்பு
இந்தியா

உ.பி.: நில அபகரிப்பு வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை

Updated On : 8 ஜூன், 2024 at 12:42 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்திய வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் சோலங்கியை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அவரின் வீட்டை இா்ஃபான் சோலங்கி உள்ளிட்டோா் தீயிட்டு கொளுத்தியுள்ளனா். இந்த வழக்கில் இா்ஃபான் சோலங்கி, அவரின் இளைய சகோதரா் ரிஸ்வான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அவா்களுக்கு தலா ரூ.35,000 அபராதம் விதித்தும் அதை அவா்கள் செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்குமேல் சிறைத் தண்டனை பெற்றால் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அவா்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவா். மேலும், சிறைத் தண்டனையை நிறைவு செய்தபின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவா்களால் தோ்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →