முகப்பு
இந்தியா

தில்லியில் கனமழை: மெட்ரோ ரயில்களில் கூடுதலாக 7 லட்சம் பேர் பயணம்

தில்லி மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட கூடுதலாக 7 லட்சம் பயணிகள் பயணம்

Updated On : 29 ஜூன் 2024, 9:31 pm IST
பகிர்:

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதனால், பல பகுதிகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட மற்றும் கடுமையான வெப்பத்திற்குப் பிறகு இறுதியாக பருவமழை தில்லியை வந்தடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், புதுதில்லியில் கடந்த 20 முதல் 30 மணி நேரத்தில் 228 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தில்லியில் ஜூன் மாத சராசரி மழைப்பொழிவைவிட 3 மடங்கு அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தில்லியில் மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட கூடுதலாக 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தில்லியில் மெட்ரோ ரயில்களில் 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.