முகப்பு
தமிழ்நாடு

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி...

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி உதயநிதி ஸ்டாலின் பதிவு....

Updated On : 16 ஜூன் 2026, 12:22 pm IST
முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாகவும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவைப் பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

Advertisement

Advertisement

"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.

நீங்கள் நியமித்ததாக சொன்ன சிறப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Udhayanidhi Stalin posts about crimes against women and girl children in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.