‘கூகுள் மேப்’பை நம்பி கால்வாய்க்குள் பாய்ந்த கார்: கேரளத்தில் பரபரப்பு
கேரளத்தில் கூகுள் மேப்பை நம்பி இயக்கப்பட்ட கார் கால்வாய்க்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் கூகுள் மேப்பை நம்பி மூணாறில் இருந்து ஆலப்புழா நோக்கி காரில் பயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை 3 மணியளவில் கோட்டயம் மாவட்டம், குருபந்தாரா அருகே வழி தவறி கால்வாய்க்குள் பாய்ந்தது.
Advertisement
Advertisement
உடனடியாக காரின் பின்பகுதியான டிக்கியை திறந்து காரில் பயணித்த 4 பேரும் வெளியேறியதால் உயிர்தப்பினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கிரேன் மூலம் காரை மீட்டனர். கனமழை காரணமாக நிலவிய கடுமையான சீதோஷணநிலையே விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கார் ஓட்டுநர் கூறியதாவது, கால்வாயை தண்ணீர் தேங்கிய சாலை என்று தவறாக எண்ணிவிட்டேன். நான் 10 கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.
வாகனத்தின் பின்புறம் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியபோதுதான் நாங்கள் விபத்தை உணர்ந்தோம். காரில் இருந்து ஜன்னல் வழியாக தப்பித்தோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.