கூகுள்-பே, போன்-பேக்கு போட்டியாக களமிறங்கும் அதானி குழுமம்?
இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகளை விரைவில் வழங்க உள்ளது அதானி குழுமம்.
இந்தியாவில் இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட சூழலில், கூகுள்-பே, போன்-பே போன்ற இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் தளங்களுக்கு போட்டியாக, அதானி குழுமம் விரைவில் களமிறங்க உள்ளது.
இது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகாவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
ஏப்ரல் வரையிலான நிலவரப்படி, இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனையில் 48.9 சதவீத சந்தை பங்குகளுடன் வால்மார்ட் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தளமான போன்-பே முதலிடத்தில் கோலோச்சி வருகிறது. அதற்கடுத்த இடத்தில், 37.7 சதவீத சந்தை பங்குகளுடன் கூகுள் நிறுவனத்தின் கூகுள்-பே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதானி குழுமம் இவ்விரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Advertisement
Advertisement
இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனை சந்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 814.43 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளுக்கு உள்கட்டமைப்பில் 84 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இணைய வழியிலான ஷாப்பிங் தளத்தையும் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கவும் அந்நிறுவனம் திடமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து முழு ஒப்புதல் கிடைத்தவுடன் அதானி குழுமத்தின் ’அதானி-ஒன்’ செயலி மூலம் ஷாப்பிங் சேவைகளை வழங்க உள்ளது.
இந்தியாவில் இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட சூழலில், கூகுள்-பே, போன்-பே போன்ற இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் தளங்களுக்கு போட்டியாக, அதானி குழுமம் விரைவில் களமிறங்க உள்ளது.
இது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகாவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
ஏப்ரல் வரையிலான நிலவரப்படி, இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனையில் 48.9 சதவீத சந்தை பங்குகளுடன் வால்மார்ட் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தளமான போன்-பே முதலிடத்தில் கோலோச்சி வருகிறது. அதற்கடுத்த இடத்தில், 37.7 சதவீத சந்தை பங்குகளுடன் கூகுள் நிறுவனத்தின் கூகுள்-பே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதானி குழுமம் இவ்விரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனை சந்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 814.43 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளுக்கு உள்கட்டமைப்பில் 84 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இணைய வழியிலான ஷாப்பிங் தளத்தையும் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கவும் அந்நிறுவனம் திடமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து முழு ஒப்புதல் கிடைத்தவுடன் அதானி குழுமத்தின் ’அதானி-ஒன்’ செயலி மூலம் ஷாப்பிங் சேவைகளை வழங்க உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.