முகப்பு
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியான முக்கிய விவரம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்ற விவரம் வெளியானது.

Updated On : 6 செப்டம்பர் 2024, 12:47 pm IST
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்
பகிர்:

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றத்தில், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என்றும், விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, சஞ்சாய் ராய்க்கு எதிராக பெண் மருத்துவர் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை மிகத் துல்லியமாக தயாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் அதனை தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்திருபப்தாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனையில் பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதற்கு மறுநாள், காவல்துறை தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவது ஒன்றுதான் சஞ்சாய் ராய்க்கு எதிராக இருக்கும் மிகப்பெரிய ஒரே முக்கிய ஆதாரமாகும்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவா் பற்றி தவறான கருத்துகளுடன் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐயிடம் கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments