ஜன.10-ல் ஹிந்தி நாள் கொண்டாடப்படுவது ஏன்?
உலகம் முழுவதும் இன்று (ஜன. 10) ஹிந்தி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காண்போம்.
உலகம் முழுவதும் இன்று (ஜன. 10) ஹிந்தி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காண்போம்.
வெளிநாடுகளில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 10ஆம் தேதி ஹிந்தி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பு, 2016ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நாக்பூரில் ஹிந்தி மொழிக்கான மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஹிந்தி மொழியை உலக அரங்கில் கொண்டுசெல்லும் நோக்கத்தில் ஹிந்தி நாள் கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதனால், மாநாடு நடைபெற்ற ஜன. 10ஆம் தேதியே ஆண்டுதோறும் ஹிந்தி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் உள்ளிட்டவையும் ஜன.10ம் தேதியை உலக ஹிந்தி நாளாக கடைப்பிடிக்கிறது.
உலக ஹிந்தி நாளையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் சுவாமி விவேகானந்தா கலாசார மையம் சார்பில் 2 நாள்கள் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.