முகப்பு
இந்தியா

தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!

பலருக்கு உடல்நிலை பாதிப்பு - தீவிர சிகிச்சை...

Updated On : 1 ஏப்ரல் 2025, 2:40 pm IST
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பேவார் மாவட்டத்திலுள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் திங்கள்கிழமை நள்ளிரவில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆலையின் உரிமையாளர் உள்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

நைட்ரஜன் வாயுவை சுவாசித்ததே உயிரிழப்புக்கான காரணமென கூறப்படுகிறது. மேலும் பலர் வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.