முகப்பு
இந்தியா

சைஃப் அலிகான் வழக்கு: புதிய ரேகைகளை அனுப்பிவைத்த மும்பை காவல் துறை!

மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது.

Updated On : 26 ஜனவரி 2025, 5:35 pm IST
கைது செய்யப்பட்டுள்ள ஷரீஃபுல் முகமது ரோஹில்லா / சைஃப் அலிகான்
பகிர்:

மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பல புதிய கைரேகைகளை புலனாய்வுத் துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பிவைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகா் பகுதியான பாந்த்ராவில் கடந்த 19ஆம் தேதி நடிகா் சைஃப் அலிகான் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பிறகு, சைஃப் அலி கானைத் தாக்கியதாக வங்கதேசத்தை சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா என்ற 30 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தான் நுழைந்தது நடிகாா் சைஃப் அலி கானின் வீடு என்பது ஷரீஃபுல்லுக்கு தெரியவில்லை. திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் அவா் நுழைந்துள்ளாா். அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் சைஃப் அலிகான் குடியிருப்பில் 19 கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதில் ஒன்றில் கூட முகமது ரோஹில்லாவின் கைரேகையுடன் பொருந்தவில்லை என சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மேலும் சில கைரேகைகளை சேகரித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments