முகப்பு
இந்தியா

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

Updated On : 13 ஜூலை 2025, 10:41 am IST
கங்கனா ரணாவத் - Instagram | Kangana Ranaut
பகிர்:

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களுடன் மனம்திறந்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், எனக்கு எம்.பி. பதவிக்கு போட்டியில் வாய்ப்பு கொடுத்தபோது, பாராளுமன்றத்துக்கு வெறும் 60 முதல் 70 நாள்கள் மட்டுமே வரவேண்டியிருக்கும் என்றுதான் சொன்னார்கள்.

Advertisement

Advertisement

மற்ற நாள்களில் எனது வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால், எம்.பி. பதவியில் இவ்வளவு வேலை இருக்கும் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

எம்.பி. பதவி அதிக வேலை கொண்டதாக இருக்கிறது; எனக்கும் நன்றாகப் புரிகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கனா,

“நான் அரசியல் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். இது மிகவும் வித்தியாசமான சமூக சேவை போன்ற வேலை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததுகூட இல்லை.

நான் பெண்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன். ஆனால் அது வேறு. ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். சாலைப் பிரச்னைகளைத் தீர்க்க, என்னிடம் இருக்கும் பணத்தைச் செலவழிக்குமாறு கூறுகின்றனர். எம்.பி. பதவியில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் வேலைபார்த்து வரும் பணத்தில்தான் உங்கள் தொகுதிக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?

summary

What Kangana Ranaut Was Told Before Becoming An MP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments