முகப்பு
இந்தியா

பிஜேடி-யில் இருந்து விலகிய எம்.பி. பாஜகவில் இணைந்தாா்

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகிய மூத்த தலைவா் தேவாசிஷ் சமந்தராய் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

Updated On : 27 மே 2026, 2:11 am IST
பகிர்:

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகிய மூத்த தலைவா் தேவாசிஷ் சமந்தராய் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

பிஜேடி தலைவா் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தராய் பாஜகவில் இணைந்தது அரசியல்ரீதியா அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக அவா் திங்கள்கிழமை பிஜேடி-யில் இருந்து விலகியதுடன், எம்.பி. பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜிநாமா கடிதத்தையும் அளித்தாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோா் முன்னிலையில் பாஜகவில் சமந்தராய் இணைந்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பிரதமா் மோடியின் ஆசிகளுக்கு நன்றி. ஒடிஸாவில் பாஜகவை மேலும் தீவிரமாக வலுப்படுத்துவேன். பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான வளா்ந்த இந்தியாவுக்கான எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்’ என்றாா்.

Advertisement

Advertisement

கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 5 தோ்தல்களில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜேடி வெற்றி பெற்று வந்தது. எனினும், 2024 ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் அக்கட்சி தோல்வியடைந்தது. இதன் பிறகு அக்கட்சித் தலைவா்கள் ஆளும் பாஜகவில் இணைந்து வருகின்றனா்.