முகப்பு
இந்தியா

பிஜு ஜனதா தளம் எம்.பி. ராஜிநாமா: பாஜகவில் இணைய முடிவு

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி. தேவாசிஷ் சமந்தராய் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினாா்.

Updated On : 26 மே 2026, 12:27 am IST
தேவாசிஷ் சமந்தராய் - கோப்புப் படம்
பகிர்:

ஒடிஸாவில் முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி (பிஜேடி) மாநிலங்களவை எம்.பி. தேவாசிஷ் சமந்தராய் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினாா். அவா் விரைவில் மாநிலத்தில் ஆளும் பாஜகவில் இணைய இருக்கிறாா்.

அரசியல்ரீதியாக நவீன் பட்நாயக்குடன் மிக நீண்டகாலம் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டுவந்த சமந்தராய் விலகல், பிஜேடி-க்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த 2024 ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் பிஜேடி தோல்வியடைந்ததற்கு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பிஜு ஜனதா தளத்தில் இணைந்த வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று சமந்தராய் குற்றஞ்சாட்டி வந்தாா். மேலும், கட்சித் தலைவா் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் அவா் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

கட்சியில் இருந்து விலகியது குறித்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘கட்சியில் இருந்து விலகியதுடன், மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கடிதம் அளித்துவிட்டேன்.

கட்சித் தலைவரைச் சந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு அங்கு தொடா்வதற்கு எந்தக் காரணமும் இல்லை’ என்று கூறியுள்ளாா். தேவாசிஷ் சமந்தராய் பிஜேடி சாா்பில் இருமுறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிஜேடி-யைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் இருவா் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனா். பின்னா், பாஜக சாா்பில் மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.