மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுப்பு
மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் சருராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒன்பது வயது சிறுமி இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறையில், வியாழக்கிழமை மாலை அச்சிறுமி முகாமில் இருந்து காணாமல் போனார்.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சிறுமியைத் தேடத் தொடங்கினர். பின்னர் இரவு நேரத்தில் சிறுமியின் சடலம் நிவாரண முகாம் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் சடலத்தில், குறிப்பாக தொண்டையில், இரத்தக் கறைகள் தவிர, பல காயங்கள் இருந்தன.
சேலத்தில் படம் எடுத்தால் ஓடாது என பலரும் கூறினர்: இயக்குநர் மாரி செல்வராஜ்
எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், சடலம் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் குறிபிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.