முகப்பு
இந்தியா

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரணடைந்துள்ளதைப் பற்றி...

Updated On : 26 மார்ச் 2025, 1:55 pm IST
பகிர்:

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் உள்பட 9 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில்,

Advertisement

Advertisement

மாவோயிஸ்டு கொள்கைகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளினாலும் அவர்கள் பழங்குடியினரைச் சீரழிப்பதினாலும் அதிலிருந்து விலகியதாகவும், பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் தற்போது அதிகரித்து வருவதாலும் மூத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிராமங்களில் வளர்ச்சியை எளிதாக்கும் நோக்கில் மாநில அரசின் திட்டத்தால் சரணடைந்த நக்சல்கள் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சரணடைந்த தீவிரவாதிகளில், மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் நிறுவனத்தின் எண் 2-ஐச் சேர்ந்த பண்டு என்கிற பண்டி மட்கம் (22) ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். மாசே என்கிற வெட்டி கன்னி (45) மற்றும் பதம் சம்மி (32) ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. ஒரு பெண் மற்றும் 3 ஆண் நக்சல்களுக்கு தலா ரூ. 2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், சரணடைந்தவர்களுக்கு அரசு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அமைத்துத் தரப்படும் எனவும், உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுக்மாவில் கடந்த 2020ல் மின்பா தாக்குதல் உள்பட பல்வேறு நக்சல் தாக்குதல்களில் பண்டு ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது, இதில் 17 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சரணடைந்த மற்றொரு நக்சல் பாதுகாப்புப் படையினர் மீதான பல தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் மொத்தம் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments