ஜார்க்கண்டில் 27 மாவோயிஸ்டுகள் சரண்!
ஜார்க்கண்டில் 27 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...
ஜார்க்கண்டில், 27 மாவோயிஸ்டுகள் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு, பல்வேறு வழக்குகளின் கீழ் தேடப்பட்டு வந்த 27 மாவோயிஸ்டுகள் இன்று (மே 21) ராஞ்சி காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களில் 123 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஆங்காரியா (எ) டோகோல் (வயது 50), 48 வழக்குகளில் தேடப்பட்டு வந்த காடி முண்டா (எ) குல்ஷன் (34) ஆகியோரும் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் எனவும், அவர்கள் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
“ஆபரேஷன் நவஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 27 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர், 44 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 29 பேர் சரணடைந்துள்ளனர். இன்னும், மீதமுள்ள மாவோயிஸ்டுகள் சரணடைவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
It has been reported that 27 Maoists have surrendered to the police in Jharkhand.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.