சிந்தூர் தாக்குதல் நடந்த இடம் எப்படியிருக்கிறது? வெளியானது செயற்கைக்கோள் புகைப்படம்
சிந்தூர் தாக்குதல் நடந்த இடம் எப்படியிருக்கிறது என்பது குறித்து செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களின் மேக்ஸர் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பஹவல்பூர் பயங்கரவாத முகாம்கள், தாக்குதலுக்கு முன்பு, மற்றும் தாக்குதலுக்கு பின்பு என இரண்டு செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியிருப்பதாகவும், இதில் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் படத்தில் ஒரு பெரிய கட்டடமும், அதனைச் சுற்றி கட்டமைப்புகளும் இருப்பதும், அடுத்து பெரிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஓட்டை விழுந்திருப்பதும், அருகிலிருந்து கட்டடங்கள் தரைமட்டமாகியிருப்பதும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.
இந்த ஆபரேஷன் சிந்தூர் அதிரடித் தாக்குதலை, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையாமலேயே, இந்தியா மேற்கொண்ட அதிதுல்லிய தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாகியிருக்கின்றன.
நள்ளிரவு 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணி வரை 25 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் தரைமட்டமான பயங்கரவாத முகாம்களின் செயற்கைக் கோள் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.