முகப்பு
இந்தியா

8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றுகிறார்.

Updated On : 12 மே 2025, 4:22 pm IST
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

நாட்டு மக்களுக்காக இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்டது.

இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றன. பின்னர் மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பல இந்திய ராணுவத் தளங்களைத் தாக்க முயன்றது.

Advertisement

Advertisement

பின்னர், ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் உள்ளிட்ட பல பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ஆயுதப் படைகள் கடுமையான எதிர் தாக்குதலைத் தொடங்கின.

நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, மே 10-ஆம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலானது.

இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு முதல் முறையாக உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments