மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தது குறித்து...
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா தன்னால் இயன்றதைச் செய்து, ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயனத்தின் முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானைச் சந்தித்தார். அப்போது தொடக்க உரையில் பிரதமர் மோடி பேசியதாவது:
Advertisement
"ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களை நாங்கள் கண்டித்தோம். இந்தப் போரில் ஐக்கிய அரபு அமீரகம் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், தற்போதைய சூழ்நிலையை அமீரகம் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.
மேலும், மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா தன்னால் இயன்ற அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயாராக உள்ளது” எனக் கூறினார்.
பிரதமர் மோடி தனது சமூக ஊடக பக்கத்தில், “எரிசக்தி, முதலீடு, மற்றும் பல முக்கியத் துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் கலந்துரையாடல்களை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.