முகப்பு
இந்தியா

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 6:23 pm IST
நரேந்திர மோடி - பிடிஐ
பகிர்:

தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான சுகாதார சேவை மேலும் மலிவாகக் கிடைக்கும் வகையிலும் அனைவராலும் அணுகக் கூடிய வகையிலும் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா பாடுபட்டு வருகிறது.

Advertisement

Advertisement

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஏழை எளிய மக்களுக்கும் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக நாங்கள் பெருமை அடைகிறது.

இதுமட்டுமின்றி மக்கள் மருந்தகம் மூலம் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. சிறுநீரகம் மற்றும் மூட்டு அறுவைச் சிகிச்சைகள் அனைவராலும் அணுகக் கூடிய வகையில் கிடைப்பது பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் கூடுதலான மருத்துவக் கல்லூரிகள் மூலம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மருத்துவக் கல்வியும் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான இந்தியாவை கட்டமைப்பதற்காக இந்த தளத்தில் இன்னும் அதிகப்படியான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் என பிரதமர் மொடி பதிவிட்டுள்ளார்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரசாரமாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் சுகாதார மேம்பாட்டிற்காக அத்துறையில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.