முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 24 மே 2025, 4:16 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, கம்ஹரியாவின் சித்ரகுப்த நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கிருஷ்ண குமார் (40), அவரது மனைவி டோலி தேவி (35) மற்றும் இரு மகள்கள் ஆகியோரின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயம்

கிருஷ்ண குமாருக்கு புற்றுநோய் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கம்ஹரியாவில் உள்ள ஒரு எஃகு ஆலையில் குமார் மூத்த மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments