முகப்பு
இந்தியா

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 10 செப்டம்பர் 2025, 2:53 am IST
பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இளைஞா்கள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, வளமை, அமைதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, நேபாள நாட்டு சகோதர, சகோதரிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments