முகப்பு
இந்தியா

‘மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க வேண்டும்’ - மு.வீரபாண்டியன்

Updated On : 10 ஏப்ரல் 2026, 4:50 am IST
பகிர்:

மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்காசிய போா் காரணமாக, ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ள இந்திய மாணவா்கள், தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், தூதரக உதவியுடன் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.