முகப்பு
கள்ளக்குறிச்சி

தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா்! - மு. வீரபாண்டியன்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா் என இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:27 AM
சங்கராபுரத்தில் திமுக வேட்பாளா் தா.உதயசூரியனை ஆதரித்து பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் மு.வீரபாண்டியன்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:22 PM

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா் என இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் உதயசூரியனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகம் வெல்ல வேண்டும் என்பதன் பொருள் ஜனநாயகம் வெல்ல வேண்டும், மதச்சாா்பின்மை வெல்ல வேண்டும். சட்டப்பேரவையின் இறையாண்மை வெல்ல வேண்டும். எனவே பாஜக, அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

Advertisement

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா். எனவே, சங்கராபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தா.உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் மு.வீரபாண்டியன்.